cinema, cinema news, kutty story, vijay

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

விஜய் சில ஆண்டுகளாகவே “குட்டி ஸ்டோரி” சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான். விழா மேடையில் அவர் வந்தாலே கைதட்டல், விசில் சத்தம் விண்ணை பிளக்கும். தற்பொழுது குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். 

அந்த வகையில் வாரிசு பட விழாவில அவர் சொன்ன குட்டி ஸ்டோரி அனைவரையும் கவர்ந்தது. 
விஜய் எப்போதும் அவரது படங்களில் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் பேசும்போது தவறாமல் ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லி வருகிறார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படி என்ன கதை சொல்லப்போகிறார் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.A
அவர் சொன்ன கதை இதுதான்..
ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என நான்கு பேர் இருந்தனர். அப்பா தினமும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது இரண்டு சாக்லேட் வாங்கி வருவார்.
தங்கை அந்த சாக்லேட்டை சாப்பிட்டுவிடுவார். ஆனால் அண்ணன் அது நாளைக்கு பள்ளிக்கு எடுத்து செல்லலாம் என நினைத்து ஒரு இடத்தில் அதை ஒளித்து வைப்பார். அதையும் தங்கை சற்று நேரத்தில் எடுத்து சாப்பிட்டுவிடுவாள்.
அன்பு என்றால் என்ன என ஒரு நாள் தங்கை அண்ணனிடம் கேட்க, ‘உன்னோட சாக்லேட்டை நீ சாப்பிடுற, நான் மறைத்து வைக்கும் சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டுடுற. நீ எடுப்பனு தெரிஞ்சும் அதே இடத்தில டெய்லி உன் அண்ணன் சாக்லேட் வைக்குறேன்ல.. அது தான் அன்பு என சொன்னாராம்.
அன்பு மட்டுமே இந்த உலகத்தையே ஜெயிக்க கூடிய மிகப்பெரிய ஆயுதம். நமக்காக எதையும் விட்டுக்கொடுக்கக்கூடிய நமது உறவுகள், எதுக்காகவும் நம்மை விட்டுக்கொடுக்காத நண்பர்கள்.. 
இந்த இரண்டு அன்பு இருந்துவிட்டாலே எல்லாம் முடிந்தது. இப்படி அட்ராக்டிவ்வான குட்டி ஸ்டோரியை சொல்லி ரசிகர்களை பெரு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளார். 
அன்பு தான் அனைத்திற்கும் காரணம், அதுவே பிரதானம். என்பதை குட்டி ஸ்டோரி கதை மூலம் ரசிகர்களுக்கு சொல்லி புரியவைத்துள்ளார்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.