cinema

கமலை விட்டு கௌதமி பிரிய உண்மையான காரணம் இதுதானாம்… ! இத்தனை நாள் கழித்து வெளியான தகவல் !

nadigai gouthami kamal

நடிகர் கமல் சினிமாவைப் பொருத்தவரை சகலகலா வல்லவன். அனைத்து துறைகளிலும் பின்னி பெடலெடுப்பவர். ஆனால் சொந்த விஷயங்களில் சில பிரச்னைகள் நிறைந்த்தாகவே இருக்கும். 

அவர் ஆசைப்பட்டு திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்த விஷயத்திலிருந்து, அவரது மகள்கள் தனியே பிரிந்து வாழ்ந்து வருவது வரை எல்லாமே புரியாத புதிராகவே இருக்கும். 
actress gouthami photos

அந்த வகையில் கமல் தனித்திருந்தபொழுது, அமெரிக்காவிலிருந்து வந்த கௌதமி அவருடன் ஒன்றாக ஒரு சில வருடங்கள் இருந்தார். அவருடன் கௌதமியின் மகளும் இருந்தார். 
தொடர்ந்து போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திரும்பவும் புயல் வீச, கௌதமி திடீரென கமலை பிரிவதாக அறிவித்தார். 

இதனால் ஆண்டவர் என்ற சொல்லப்படுகிற கமல் பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் திடீர் பிரிவுக்கு இதுதான் காரணம் என இப்பொழுது தெரிய வந்துள்ளது. 
நடிகை கௌதமி அமெரிக்காவில் இருக்கும்பொது ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்தியா திரும்பினார்.தனது மகளுடன் வந்த அவருக்கு கமல் அடைக்கலம் கொடுத்தார். 

அதன் பின்பு ஏறக்குறைய 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். திடீரென ஒரு நாள் கௌதமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், தன்னுடைய மகளுக்கு நல்ல தாயாக இருக்க வேண்டியது கட்டாயம் என்றும் அதில் தெரிவித்திருந்தார். 
இதனையடுத்து கமல் வெளியிட்டதாக ஒரு போல அறிக்கை வாட்சப்பில் பரவி கொண்டிருந்தது. ஆனால் அது தன்னால் வெளியிடப்பட்டது அல்ல என்று அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் கமல். 

முழுக்க முழுக்க தன்னுடைய மகள் எதிர்காலம் கருதிதான் பிரிவதாகவும், எப்பொழுதும் போல கமலுடைய ரசிகையாக தொடர்வேன் என்றும் கௌதமி இறுதியில் தெரிவித்தார். 

இதுதான் கமலை தான் விட்டு பிரிய காரணம் என்று தெளிவாக கூறியிருந்தார் கௌதமி. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.