cinema

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்பட நாயகிக்கு திடீரென என்ன ஆச்சு!

பிரபல நடிகை விசாக சிங் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முதன் முதலில் பிடிச்சிருக்கு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் விசாகா சிங்.

முன்னதாக நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தவர்,  திடீரென தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பேஜில் தான் வெளியிட்ட செய்தியில் எப்பொழுதும் நீண்ட நேரம் என்னால் வெளியே இருக்க முடியாது என்றும் வாழ மற்றத்தால் அவ்வப்பொழுது நடக்கும் நிதானமான சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் உடல்நிலை பிரச்சனைகள் பெரிதும் காரணமாக அமைகின்றன என்றும் அதில் குறிப்பிட்டார்.

அந்த தகவலை வைத்து பார்க்கும் பொழுது தற்போது அவருக்கு கோடைகாலம் ஆகையால் வெயில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

எனும் அந்த செய்தியை கண்ட ரசிகர்கள் அனைவரும் விரைவில் நீங்கள் நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் என்று அவருக்காக பிரார்த்தித்து வருகின்றனர் .